ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தாபா காமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தப் புதிய தலைமை மாற்றத்திற்குப் பிறகு, அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. முந்தைய தலைவரைப் போல மொஜ்தாபாவை அவ்வளவு எளிதாக நெருங்க முடியாது என்றும், அவருக்குப் பாதுகாப்பு அளிக்க ஈரானின் மிகவும் ரகசியமான ‘NOPO’ சிறப்புப் படை களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கருப்பு உடை’ அணிந்த இந்தப் படையினர், ஈரான் காவல்துறையிலேயே மிக உயர்தரப் பயிற்சி பெற்ற பயங்கரவாத எதிர்ப்புச் சிறப்புப் பிரிவினர் ஆவர். இவர்கள் ஈரானியப் புரட்சிகரப் படை (IRGC) உள்ளிட்ட மற்ற ராணுவப் பிரிவுகளைக் காட்டிலும் மிகுந்த கொடூரமானவர்களாகவும், உச்ச தலைவருக்கு மட்டுமே நேரடி விசுவாசம் கொண்டவர்களாகவும் அறியப்படுகின்றனர். கடத்தப்பட்டவர்களை மீட்பது இவர்களது பெயரளவுப் பணியாக இருந்தாலும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளையும் எதிர்ப்புகளையும் வன்முறை கொண்டு ஒடுக்குவதே இவர்களது பிரதான வேலையாக இருந்து வருகிறது.
புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற 56 வயதான மொஜ்தாபா காமேனி, இதுவரை நாட்டு மக்களுக்கு உரையாற்றவோ அல்லது பொதுவெளியில் தோன்றவோ இல்லை என்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று நடந்த தாக்குதலில் அவரது தந்தை கொல்லப்பட்டபோது, மொஜ்தாபாவின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் நலமுடன் இருப்பதாகத் தரப்புகள் மறுப்புத் தெரிவித்தாலும், அவர் ரகசியமான முறையில் NOPO படைகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மொஜ்தாபாவை ஒரு ‘பெயரளவு’ தலைவராக வைத்துக்கொண்டு, ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) நாட்டைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகப் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் ஈரான் ஒரு மதச்சார்பு தேசம் என்ற நிலையிலிருந்து மாறி, முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நாடாக உருவெடுக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. புதிய தலைவரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த ‘நூறடுக்கு’ பாதுகாப்பு வளையம், ஈரானின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…