ஆகஸ்ட் 12, 2026 அன்று இந்த ஆண்டின் மிக முக்கியமான விண்வெளி நிகழ்வான சூரிய கிரகணம் நிகழவுள்ளது. பொதுவாக முழு சூரிய கிரகணத்தின் போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்து இருளைக் கொண்டுவரும். ஆனால், இந்த முறை ஒரு சுவாரசியமான வானியல் திருப்பம் (Twist) காத்திருக்கிறது. இந்த கிரகணத்தின் போது நிலவானது பூமிக்கு மிகத் தூரமான பாதையில் பயணிப்பதால், அதன் தோற்ற அளவு சூரியனை விடச் சிறியதாக இருக்கும். இதன் காரணமாக நிலவால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது; மாறாக, சூரியனின் மையப்பகுதியை மட்டும் ஒரு கறுப்புப் புள்ளி போல மறைக்கும். அப்போது சூரியனின் விளிம்புகள் மட்டும் வான்வெளியில் பிரம்மாண்டமான பிரகாசத்துடன் தோன்றி, விண்வெளியில் ஒரு ‘நெருப்பு மோதிரம்’ (Ring of Fire) மிதப்பது போன்ற ஒரு மாயாஜாலக் காட்சியை உருவாக்கும்.
அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 11:34 மணிக்குத் தொடங்கி, மாலை 6:55 மணி வரை இந்த அரிய நெருப்பு வளைய கிரகணத்தின் நிழல் உலகை வலம் வரப் போகிறது. எனினும், பூமியின் மிகக் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு மட்டுமே இந்தக் கண்கொள்ளாக் காட்சி நேரடியாகத் தெரியப்போகிறது. குறிப்பாக ஐரோப்பாவின் வடக்கு ஸ்பெயின், கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடகிழக்கு ரஷ்யா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் உள்ள மக்கள் இந்த அற்புத நிகழ்வை லைவ்-ஆகக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்திய வான் ஆர்வலர்களுக்கு இந்த நிகழ்வில் ஒரு சிறிய ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஏனெனில், இந்த நெருப்பு வளைய கிரகணம் நிகழும் ஒட்டுமொத்த நேரமும் இந்தியத் துணைக் கண்டத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரமாக (இந்திய நேரப்படி இரவு 9:04 மணி முதல் அதிகாலை 4:25 மணி வரை) அமைந்துவிடுகிறது. இதனால், இந்தியாவில் இந்த கிரகணத்தை முற்றிலும் காண முடியாது. அதேவேளையில், இந்தியாவில் கிரகணம் தெரியாது என்பதால், நமது பாரம்பரிய ஜோதிட விதிகளின்படி கிரகணக் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் ‘சூதக் காலம்’ போன்ற எந்தவொரு ஆன்மீகக் கட்டுப்பாடுகளும், வழிபாட்டுத் தடைகளும் இந்த முறை இந்தியாவிற்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…