பொதுவாகவே அனைவர் வீட்டிலும் பல்லி இருக்கும். நம் உடலில் பல்லி விழுந்தால் மற்றும் பள்ளி சத்தம் போட்டால் என்ன பலன் என்று இந்த பதிவில் பார்க்கலாம். தலையில் விழுந்தால் அவர்களுக்கு வரப்போகின்ற கெட்ட சகுனத்தை காட்டுவதாக அர்த்தமாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுற்றி இருப்போருடன் வாக்குவாதம் முற்றி பெரிய பிரச்சனை வரலாம், மனநிம்மதி இல்லாமல் போகலாம் நெருக்கமானவர் யாரேனும் இலக்க நேரிடலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மன நிம்மதியை இழப்பீர்கள். நெற்றியின் மீது பல்லி விழுந்தால் நல்ல சகுணமாக இருக்கும். நெற்றியின் இடது பக்கம் விழுந்தால் கீர்த்தி கிட்டும், வலது பக்கம் விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். தலையில் படாமல் முடியின் மீது பட்டு கீழே விழுந்தால் நன்மை உண்டாகும்.
மூக்கில் பல்லி மற்றும் முகத்தில் விழுந்தால் வீட்டுக்கு உறவினர்கள் வருவார்கள். புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜ பதவி மற்றும் உயர் பதவி உள்ளவர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். கண்களில் விழுந்தால் ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களுக்கு தண்டனை கிடைக்கும். இடது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வலது கை மட்டும் காலில் விழுந்தால் அன்றைய நாளில் உடல்நல கோளாறு ஏற்படும். பாதத்தில் பல்லி விழுந்தால் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் போன்ற பொருட்கள் வாங்குவீர்கள்.
தொடையில் பல்லி விழுந்தால் பெற்றோர்களை வருத்தத்திற்கு தள்ளுவீர்கள். மார்பு மீது பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். அதுவே இடது மார்பாக இருந்தால் சுகம் கிடைக்கும். கழுத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் அனைத்து காரியமும் வெற்றி பெறும். அதுவே வலது கழுத்தில் விழுந்தால் பகை உண்டாகும். உடலில் எந்த பாகத்தில் பல்லி விழுந்தாலும் உடனே குளிப்பது முக்கியம் மற்றும் ஏதோ ஒரு கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்று வாருங்கள். இல்லையெனில் வீட்டிலே விளக்கேற்றி சுவாமியை வழிபடுங்கள். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பள்ளி சிலையை தொட்டு வணங்கினால் பிற்காலத்தில் பள்ளி விழுந்தாலும் எந்த ஒரு தீங்கும் நடக்காது.
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…