மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழக (RGPV) விடுதி கேன்டீனில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதிய உணவின் போது ஒரு மாணவரின் கறியில் (Curry) இறந்த பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து கேன்டீன் ஊழியர்களிடம் புகார் அளித்தபோது, அவர்கள் அதை ஏற்க மறுத்து மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில், கேன்டீன் ஊழியர் ஒருவர் செய்த விசித்திரமான செயல் அனைவரையும் வாயடைக்க வைத்தது. உணவில் இருந்தது பல்லி அல்ல என்றும், அது சமைக்கப்பட்ட ‘குடைமிளகாய்’ (Capsicum) துண்டுதான் என்றும் அவர் வாதிட்டார். தனது வாதத்தை நிரூபிப்பதற்காக, மாணவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பொருளை எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்கினார். இந்த அருவருப்பான மற்றும் ஆபத்தான செயல் அங்கிருந்த மாணவர்களைக் குமட்டல் எடுக்க வைத்ததுடன், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கு வெளியே திரண்டு கேன்டீன் நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் இத்தகைய அலட்சியமான போக்கைக் கண்டித்த அவர்கள், கேன்டீன் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்களை மறைக்க ஊழியர் அந்தப் பல்லியைச் சாப்பிட்டாரா அல்லது அது உண்மையிலேயே காய்கறிதானா என்பது குறித்த விவாதம் இணையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…