தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக பலம் வந்தவர் விவேக். தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் பேவரட் காமெடியனாக திகழ்ந்தவர் இவர். இவர் மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தவர். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கியவர் நடிகர் விவேக். அவர் இந்த மண்ணை விட்டு சென்றாலும் மக்களின் மனதை விட்டு இன்னும் செல்லவில்லை. விவேக் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக இருந்து வந்தவர்.
இதனிடையே விவேக்கின் குணம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ள மூத்த பத்திரிகையாளரான Cheyyar balu சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி விவேக் ஒரு இரக்ககுணம் கொண்டவர். அனைவருக்கும் உதவுவதில் வல்லவர். எப்போதும் அனைவரிடமும் பாசமாக நடந்து கொள்வார். ஒரு திரைப்படத்தில் விவேக் உடன் நடித்த பல் இல்லாத காமெடி நடிகர் ஒரு நாள் சைக்கிள் மிதித்து கொண்டு படப்பிடிப்பிற்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது காரில் வந்து கொண்டிருந்த விவேக் அதனை கண்டு மனம் உருகி அடுத்த நாள் அந்த நடிகருக்கு ஒரு TVS 50 வண்டி ஒன்றினை வாங்கி கொடுத்தார் என்று பிரபலமான பத்திரிக்கை ஆல்டர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். மேலும், இந்த அளவிற்கு இறக்க குணம் கொண்டவர்தான் விவேக் என்று அவர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராகத் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. ஜனவரி 5-ஆம்…
கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் தேர்தல்களை…
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை நடைபெறவுள்ள தேமுதிகவின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கான' பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.…
இத்தாலியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் சேர்ந்த ஜோதி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணிச் சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள…