விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 சரவெடியான போட்டி ஒன்று நடைபெற்றது. அதுதான் பணப்பெட்டி, இந்த பணப்பெட்டியை யார் எடுத்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவர் என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த சமயத்தில் விசித்ரா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் இந்த பணப்பெட்டியை மணி, மாயா, பூர்ணிமா இவர்கள் தான் எடுத்து செல்வார்கள் என பேசப்பட்டு வந்தது. யாரும் சிறிதும் எதிர்பார்க்காத நிகழ்வு நடைபெற்றது, என்னவென்றால் அந்த பணப்பெட்டியை விசித்ரா நேற்று இரவு எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் என பிரதீப் ஆண்டனி மற்றும் சுரேஷ் தாத்தா தங்கள் கருத்தை பதிவிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 100 நாளை கடந்த நிலையில் வெல்ல போகும் போட்டியாளர் யார் என மக்களிடையே பெரிதும் எதிர்பார்த்து வருகின்றன. இந்த நிலையில் விசித்ராவின் ரசிகர்கள், விசித்ரா தான் டைட்டில் வின்னர் ஆக வருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் விசித்ரா செயல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பணப்பெட்டியை யாராவது எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பிக்பாஸின் தொகுப்பாளர் கமலஹாசன்: “இருக்கும் தொகை கூடவும் செய்யும் குறையவும் செய்யும் சீக்கிரம் எடுங்கள்” என்ற கூறினார்.
இதனால் 5 லட்சமாக இருந்த பணப்பெட்டி திடீரென 3.5 லட்சமாக மாறியது. அதன்பின்பு 9 லட்சமாக மாலை மாறியது, நேற்று இரவு 13 லட்சம் பணப்பெட்டியில் வந்ததும் அதை பார்த்த போட்டியாளர்கள் 15 லட்சம் வரட்டும் என காத்திருந்தனர். இந்த நிலையில் விசித்ரா தரமான சம்பவத்தை செய்து விட்டார். அதாவது 13 லட்சம் வந்ததும் விசித்ரா அந்த பணப்பெட்டியை எடுத்து வீட்டை விட்டு வெளியேறி போறேன் என்ற அறிவிப்பையும் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை விசித்ரா வெல்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தாலும் தன்னைவிட அர்ச்சனா, தினேஷ் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்பதை புரிந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு எதுவும் இல்லாமல் போவதற்கு 13 லட்சம் பணத்துடன் போலாம் என்ற சாமத்தியமாக செயல்பட்டு இரவு 10 மணி அளவில் பிக் பாஸ் வீட்டை வெளியேறினார் என்ற தகவல் கசிந்துள்ளன. இன்று இரவு தான் அந்த காட்சியின் லைவ் டெலிகாஸ்ட் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…