உணர்ச்சிகள், அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடிகர் கமல், நடிகை ஸ்ரீதேவி இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகினர். சினிமா இன்டஸ்ட்ரியில் இருந்த பலரும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்வர் என்றுதான் எதிர்பார்த்தனர். அந்த முடிவையே கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் எடுத்தனர். ஒருநாள் ஸ்ரீவித்யாவின் வீட்டுக்கு சென்ற நடிகர் கமல், ஸ்ரீவித்யாவின் அம்மாவை சந்தித்தார். ஸ்ரீவித்யாவும், நானும் காதலிக்கிறோம். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள உங்களது பூரண சம்மதம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஸ்ரீவித்யாவின் அம்மா, நீங்கள் இருவருமே திறமைசாலிகள். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டியவர்கள். நீங்கள் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதால் இருவருக்குமே பயனில்லாமல் போய்விடும் என்று கமலிடம் மறுத்திருக்கிறார். இதனால் கோபப்பட்ட கமல், அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். பிறகு ஸ்ரீவித்யாவை சந்திக்கவும் இல்லை. பேசவும் இல்லை. அவருடன் எந்த தொடர்பும் இல்லை. இது நடந்த சில மாதங்களுக்கு பிறகு, வாணிகணபதி என்பவரை கமல்ஹாசன் திருமணம் செய்துக்கொண்ட தகவல் ஸ்ரீவித்யாவுக்கு தெரிய வந்திருக்கிறது. அப்படியே நிலைதடுமாறிய நிலையில், நிறைய வருத்தப்பட்டிருக்கிறார் ஸ்ரீவித்யா.
அதற்கு பின், ஜார்ஜ் தாமஸ் என்பவரை ஸ்ரீவித்யா திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீவித்யா. ஆனால் மிக மோசமான நபரான ஜார்ஸ் தாமஸ், ஸ்ரீவித்யாவின் அனைத்து சொத்துகளையும் பறித்துக்கொண்டு அவரையும் கொடுமைப்படுத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை விட்டுப்பிரிந்த ஸ்ரீவித்யா, நீண்ட போராட்டத்துக்கு பின், தன் கணவரிடம் இழந்த சொத்துகளை எல்லாம் மீட்டு இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் படங்களில் நடித்த ஸ்ரீவித்யா, ஒரு கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எந்த நடிகரையும், இயக்குநரையும் அப்போது சந்திக்க விரும்பாத ஸ்ரீவித்யா, தனது கடைசி நேரத்தில் சந்திக்க விரும்பியது நடிகர் கமல்ஹாசனை மட்டும்தான்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கமலும், மருத்துவமனையில் இருந்த ஸ்ரீவித்யாவை பார்த்து கண்ணீர் விட்டு கலங்கி வந்திருக்கிறார். அடுத்த சில நாட்களிலேயே இந்த மண்ணுலகை விட்டு மறைந்திருக்கிறார் ஸ்ரீவித்யா. கமல், ஸ்ரீவித்யா காதலுக்கு ஸ்ரீவித்யா அம்மா முற்றுப்புள்ளி வைத்தவுடன், அதிரடி முடிவாக வாணியை திருமணம் செய்தார் கமல். ஆனால், கமலுடன் இனி சேர வாய்ப்பில்லை என்ற நிலையில்தான், ஸ்ரீவித்யா தன் திருமணத்துக்கு சம்மதித்தார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…