பாலஸ்தீன பெண்களுக்கு எதிரான வன்முறை.. ஐநா-வின் கறுப்புப் பட்டியலில் இஸ்ரேல்..! அதிரடி நடவடிக்கையின் பின்னணி என்ன..?

Spread the love

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மோதல் கால பாலியல் வன்முறை தொடர்பான வருடாந்திர அறிக்கையின் கறுப்புப் பட்டியலில் இஸ்ரேல் சேர்க்கப்பட்டுள்ளது. போர் மற்றும் மோதல் பகுதிகளில் பாலஸ்தீனப் பெண்களுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்முறைகளை அரங்கேற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐநா-வின் இந்த கறுப்புப் பட்டியலில் இஸ்ரேல் இராணுவம் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பாலஸ்தீனக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைகள் மற்றும் தடுப்புக்காவல் மையங்களில் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாக ஐநா-விடம் நம்பகமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக ஆய்வு செய்யச் சென்ற ஐநா-வின் கண்காணிப்புக் குழுவினரை இஸ்ரேல் தங்களுக்குரிய இடங்களுக்குள் அனுமதிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், பாலியல் வன்முறையைப் போரின் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐநா குற்றம்சாட்டியுள்ளது.

ஐநா சபை எடுத்துள்ள இந்த முடிவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், தங்களைப் பயங்கரவாத அமைப்பான ஹமாஸுடன் ஒரே பட்டியலில் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் ஐநா-வுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானோன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தால் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் மற்றும் அவரது அலுவலகத்துடனான அனைத்து தொடர்புகளையும் இஸ்ரேல் முற்றிலும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Swetha

Recent Posts

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

11 seconds ago

கலைஞர் உரிமைத் தொகை வாங்கும்.. போலி பயனாளிகளுக்கு செக்..! அரசு எடுக்கப்போகும் ‘ஸ்கெட்ச்’ நடவடிக்கை என்ன..?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…

5 minutes ago

பா.ஜ.க-விலிருந்து விலகி.. புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை..? கோவையில் ஒட்டப்படும் போஸ்டர்களால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…

8 minutes ago

“காதலன் நினைவா.. இல்ல சைக்கோ தனமா?”.. ஓடும் ரயிலில் காதல் ஜோடியைப் பார்த்து வெறிபிடித்த இளம் பெண்.. வைரலாகும் பகீர் சம்பவம்..!!

வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…

10 minutes ago

“நல்லா வருது.. வேண்டாம் விடுங்க”… ரீல்ஸ் பார்த்தவங்க எல்லாம் இப்போ நியூஸ் பார்க்குறாங்க…. திருச்சி மேடையில் திமுகவை கதறவிட்ட விஜய்…!

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தமிழக…

10 minutes ago

பகீர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தையையே கொன்ற தாய்.. நடுங்க வைக்கும் பின்னணி…!

கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், அவனது தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்கர் ஆகியோரால் கொடூரமாக அடித்துக்…

16 minutes ago