பா.ஜ.க-விலிருந்து விலகி.. புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை..? கோவையில் ஒட்டப்படும் போஸ்டர்களால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

Spread the love

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டும், கோவையில் பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் நடக்கும் சூழலிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. “பயமில்லாத மனங்களுக்கு எல்லைகள் இல்லை”, “எங்கள் தலைவரே, வந்து எங்களை வழிநடத்துங்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பிரம்மாண்ட போஸ்டர்கள் கோவை நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது இந்த யூகங்களுக்கு முக்கிய காரணமாகும்.

அண்ணாமலையின் ‘அண்ணாமலை அன்புக்கூட்டம்’ என்ற நற்பணி மன்றம், புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை சேர்க்கத் தொடங்கியுள்ளதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. மேலும், சமீபத்தில் மத்திய அரசின் ‘மும்மொழி கொள்கை’ (ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய இந்தி/சமஸ்கிருத அமலாக்கம்) முடிவுக்கு எதிராக அண்ணாமலை பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார். பா.ஜ.க-வின் முக்கிய உட்கட்சி கூட்டங்களை அவர் தவிர்த்ததும், அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் கட்சியை விட்டு விலகி தனிப்பாதை வகுக்கிறாரா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த சூழலில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற அண்ணாமலையிடம் புதிய கட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தயவுசெய்து பொறுத்திருங்கள், இரண்டு நாட்களில் நாம் அமர்ந்து பேசுவோம்” என்று மர்மமான முறையில் பதிலளித்துள்ளார், இது வதந்திகளை மறுப்பதாக இல்லை. எனினும், பா.ஜ.க தலைவர்கள் இந்த பிரிவினை பேச்சுகளை மறுத்துள்ளனர்; அண்ணாமலையின் அரசியல் அடையாளம் பா.ஜ.க மூலம் உருவானது என்பதால் அவர் கட்சியிலேயே நீடிப்பார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Swetha

Recent Posts

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

13 minutes ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

23 minutes ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

33 minutes ago

“40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை”.. ஒற்றைப் பதிவில் வாயடைக்க வைத்த திரிஷா.. யாருக்கு கொடுத்த பதிலடி?.. இணையத்தை உலுக்கும் வைரல் பதிவு..!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…

43 minutes ago

5 மாத ஸ்கெச்… வெப் சீரிஸ் வெறி… சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய 17 வயது சிறுவன்..! ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…

51 minutes ago

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

53 minutes ago