தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார். சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் பணிகள் வேகம் எடுத்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகம் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பொதுக்குழுவில் தேர்தல் சின்னமாக எதை தேர்வு செய்யலாம் என்பதை ஆலோசித்து முடிவு செய்து தீர்மானம் போட விஜய் முடிவு எடுத்துள்ளாராம். மேலும் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆதரவு குறித்த முடிவை…
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், SRH அணியின் இளம் வீரர் இஷான் மலிங்கா ஒரு முக்கியமான கேட்ச்சை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்…
கடந்த 2022-ஆம் ஆண்டு பயனர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், எதிர்காலத்தில் ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும்,…
தமிழக அரசியலில் "அடுத்த முதல்வர் யார்?" என்ற மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள…
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டுவதைக்…