உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது எழுந்துள்ள ஊழல் புகார்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 1,020 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த முறைகேட்டை அமலாக்கத் துறை ஏற்கனவே வெளிக்கொண்டு வந்த நிலையில், தற்போது நீதிமன்றம் தலையிட்டு வழக்குப் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது. இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது .
இந்த விவகாரம் குறித்துக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இதனை “கபட நாடகத் திமுக அரசின் ஆகப் பெரிய அவமானம்” என்று விமர்சித்துள்ளார் . ஊழல் மலிந்த ஆட்சியில் அமைச்சர்கள் மீதான இத்தகைய புகார்கள் துடைக்க முடியாத கறையாக மாறி வருவதாகவும், குற்றச்சாட்டிற்கு உள்ளான அமைச்சரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவராகவே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…