“1991-ல் ஜெயலலிதா… 2026-ல் தளபதி… கோட்டைக்குச் செல்ல ஜெயலலிதா வகுத்த அதே பாதையைத் தேர்ந்தெடுத்த விஜய்..!!

By Soundarya on பங்குனி 29, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று (மார்ச் 29, 2026) நடைபெற்ற அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், கட்சியின் 234 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட விஜய், தனது பெயரை ‘சி. ஜோசப் விஜய்’ எனக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஒரு தொகுதியில் தோல்வியுற்றாலும் மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற அரசியல் உத்தியின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக, 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் அவர் பர்கூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகத் தனது பதவியைத் தொடர்ந்தார். அதே பாணியில் தற்போது விஜய்யும் இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். பெரம்பூரில் தி.மு.க-வின் ஆர்.டி. சேகரையும், திருச்சி கிழக்கில் தி.மு.க-வின் இனிகோ இருதயராஜையும் விஜய் எதிர்கொள்ள உள்ளார். ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், தனது கட்சிக்கு ‘விசில்’ சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.