தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக தன் பயணத்தை துவங்கியவர் பிரபுதேவா. ஜெண்டில்மேன், சூரியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் ஹீரோவாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகரான அவர், ஒரு கட்டத்தில் இயக்குநராக மாறினார்.தமிழ் மற்றும் இந்தியில் சில படங்களை பிரபுதேவா இயக்கி உள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த போக்கிரி, வில்லு ஆகிய படங்களை பிரபுதேவா டைரக்டர் செய்தார். இதில் போக்கிரி விஜய்க்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்தியில் பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படம், பாலிவுட்டில் பலத்த வரவேற்பை பெற்றது. அப்போது மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து ஒரு நேர்காணலில் பிரபு தேவா பேசி இருக்கிறார்.சமீபத்தில் அந்த நேர்காணலில் பிரபுதேவா கூறியதாவது, மும்பையில் ரவுடி ரத்தோர் என்ற இந்தி படம் ஷூட்டிங்கில் இருந்தேன். நான் டைரக்ட் செய்த படம். அப்போது, மும்பையில் துப்பாக்கி பட ஷூட்டிங்கில் விஜய் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவருக்கு உடனே போன் செய்து, ஒரு பாட்டு எடுக்கறேன். ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுங்க, வாங்களேன், ஜாலியாக ஒரு டான்ஸ் பண்ணுவோம் என்றேன். உடனடியாக ஓகே சொன்ன விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.
அவரது அதிரடி ரியாக்ஷனை பார்த்து ஷாக் ஆகி விட்டேன். உடனே நான், விஜய், அக்ஷய் குமார் மூன்று பேரும் ஜாலியாக டான்ஸ் ஆடி அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார் பிரபுதேவா இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 68 படத்தில், பிரபுதேவா நடிக்கிறார். நடன இயக்குநராகவும் அந்த படத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.