நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே விவாகரத்து தொடர்பான விவகாரங்கள் பூதாகரமாகியுள்ள நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண நிகழ்ச்சியில், நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒரே காரில் வந்து, ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து இணைந்து பங்கேற்றனர். இவர்களின் இந்த வெளிப்படையான தோற்றம், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.
சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, விஜய் இவ்வாறு பொதுவெளியில் திரிஷாவுடன் வலம் வருவது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் ரசிகர்கள், “குடும்பப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள சூழலில், மனைவிக்கு ஆதரவாக நிற்காமல் திரிஷாவுடன் இவ்வாறு ஜோடியாகத் தோன்றுவது அழகல்ல” எனத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய்யின் மகன் சஞ்சய் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படும் செய்திகளும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் ஆன்மீக தளங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து ஒரு விஜய் ரசிகர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதிவில், “தான் சென்று வரும் தேவாலயத்தில் உள்ள மக்களிடம் விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்திய செயல்களால் அந்த மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இனிமேல் சர்ச் வளாகத்திற்குள் விஜய் குறித்து பேச வேண்டாம் என்று அவர்கள் என்னிடம் கோபமாக கூறிவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார். தனக்குத் தோன்றுவதை மட்டும் செய்பவன் தலைவன் அல்ல, தன் செயல்கள் பிறரை எவ்வாறு பாதிக்கும் என்று சிந்திப்பவனே தலைவன் என்று அந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
இந்தச் சம்பவம், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் பயணத்திற்குப் பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் ரசிகர்கள் விஜய்யின் இந்தச் செயல்பாட்டை ‘வெட்கக்கேடானது’ என்று சாடி வரும் நிலையில், மறுபுறம் அவர் மீதுள்ள விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குடும்ப உறுப்பினர்கள் முதல் தேவாலயத்தில் உள்ள மக்கள் வரை இச்செயல்பாடு ஏற்படுத்தியுள்ள எதிர்மறையான தாக்கம், வரும் நாட்களில் விஜய்க்கு எத்தகைய அரசியல் மற்றும் தனிப்பட்ட சிக்கல்களை உருவாக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…
சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…