விக்னேஷ் சிவன் அவர்கள் தன் காதலியும் மனைவியும் ஆன நயன்தாரா அவர்களுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் ஒன்று செய்துள்ளார். 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி அவர்களின் நடிப்பில் வெளிவந்த “போடா போடி” படத்தை இயக்கிய தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். முதல் படத்திலே வித்தியாசமான கதைக்களம் கொண்டு அமைத்து அதை மக்களிடம் சேர்த்து, தான் சிறப்பான இயக்குனர் என்று திரை உலகிற்கு காண்பித்தார்.
அதன் பின் தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்து பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். அதில், நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், நெற்றிக்கண், பாவக்கதைகள், கனெக்ட் போன்ற படங்கள் இதில் அடங்கும். இவர் முதன் முதலில் வேலை இல்லா பட்டதாரி, சிபி போன்ற படங்களில் வசன எழுத்தாளரும் துணை இயக்குனராக பணிபுரிந்து தன் திறமை வளர்த்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவர் விஜய் சேதுபதி நயன்தாராவை வைத்து 2015 ஆம் ஆண்டு “நானும் ரவுடிதான்” படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் மாபெரும் இடத்தை பிடித்தார்.
தற்போது அந்த நானும் ரௌடி தான் படத்தில் நயன்தாராவுடன் பழகி நண்பர்களாகி பின்னர் அது காதலாக மாறி கல்யாணம் செய்து கொண்டார்கள் இவர்கள். காதலித்த சமயத்தில் நயன்தாரா அவர்கள் தான் விக்னேஷ் சிவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன் காதலை வெளிப்படுத்தி வந்தார்கள். தற்போது இவர் பெரிய இயக்குனராக வளர்ந்த பின் விக்னேஷ் சிவன் அவர்கள் நயன்தாராவிற்கு லக்ஸ்சுரி பரிசு ஒன்று அளித்துள்ளார். பிரதீப் குமார் மற்றும் எஸ்.ஜே சூர்யா அவர்களின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் தான் LIC, இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு இப்படத்திற்கான அட்வான்ஸை கொடுத்துள்ளார்.