#image_title
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறார். சேவையே கடவுள் என்ற பெயரில் லாரன்ஸ் புதிய அறக்கட்டளையை தொடங்கினார். அதில் மாற்றம் என்ற பெயரில் தொடர்ச்சியாக மக்களுக்கு உதவி வருகிறார்.
இந்த அறக்கட்டளையில் எஸ்.ஜே சூர்யா, KPY பாலா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இணைந்து செயல்படுகின்றனர். முதற்கட்டமாக 10 ஏழை விவசாயிகளுக்கு ராகவா லாரன்ஸ் டிராக்டர்களை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை சேர்ந்த விவசாயிக்கு எஸ்.ஜே சூர்யா தனது சொந்த செலவில் ட்ராக்டர் வாங்கி கொடுத்தார். மாற்றுத்திறனாளி மாணவியின் படிப்புக்கு தேவையான உதவியை ராகவா லாரன்ஸ் செய்தார்.
லாரன்ஸ் உடன் இணைந்து KPY பாலாவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். வயதான தம்பதிகளுக்கு உதவுவது வீடு கட்டி கொடுப்பது என KPY பாலாவும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர்கள் மனித தெய்வங்கள் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் அருகே வாலிபர் நின்று கொண்டிருக்கிறார். வீடியோவில் அவர் கூறியதாவது, இவர் பெயர் ஷாம்.
சின்ன வயசுல இருந்து என் தோளில் தூக்கி வளர்த்த குழந்தை. இப்போ வளர்ந்துட்டாரு. இவரு காலேஜ்ல படிச்சிட்டு இருக்காரு. பகுதி நேரமாக வேலையும் பார்த்துட்டு இருக்காரு. இவரோட சொந்த பணத்தில் மாற்றம் சேவையில் இணைந்து ஒரு குழந்தையோட படிப்புக்கு பணம் கட்ட போறாரு. இன்னையிலிருந்து சேவை பண்றதுக்கு வராரு. மாற்றத்தில் சேர்ந்து உங்க எல்லாருடைய ஆசீர்வாதத்தோடு இந்த சேவை தொடரட்டும் என பேசி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட…
தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருபவர் கமல்ஹாசன். இந்த ஆண்டுகளில் அவர் கால்பதிக்காத துறைகள் வெகுசிலவே.…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 10…
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்திருந்த ஷாலினி பாண்டே சினிமாவில் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்து தான் பட்ட கஷ்டத்தை…
தமிழ் சினிமாவின் இப்போது இருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவருக்கும் அவரின் முதல்…