உத்திரபிரதேசம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பெண்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக ஆபாச செயலில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த ரேணு ராஜ்புத் மற்றும் உண்ணாவ் நபரை சேர்ந்த நாஜ் கான் என்ற அந்த இரண்டு இளம் பெண்கள் அரைகுறை ஆடையுடன் சாலையில் படுத்து புரண்டு ஆபாச நடனமாடி ரீல்ஸ் எடுத்துள்ளனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் வாகனங்கள் வரிசையாக ஸ்தம்பித்து நின்றன. இதனால் அங்கு சற்று நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
விரைவாக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில் இந்த செயலைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இதேபோன்று இரண்டு பெண்கள் சம்பல் மாவட்டத்தில் ஆபாச வீடியோக்களை எடுத்து வெளியிட்ட நிலையில் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது ஆபாச வீடியோ எடுத்துள்ள இந்த இரண்டு பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…