இணையத்தில் வைரலாகி வரும் ஒரு புதிய வீடியோ, நாம் விரும்பி உண்ணும் ‘கிரீம் ரோல்’ (Cream Roll) திண்பண்டம் தொழிற்சாலைகளில் எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த வீடியோவில், தொழிலாளர்கள் எவ்விதமான கையுறைகளோ அல்லது முறையான பாதுகாப்பு உபகரணங்களோ இன்றி, வெறும் கைகளால் மாவை பிசைவதும், அசுத்தமான சூழலில் கிரீம் நிரப்புவதும் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, தரம் குறைந்த எண்ணெய் மற்றும் அழுக்கு படிந்த பாத்திரங்களைப் பயன்படுத்தி இந்த இனிப்பு வகை தயாரிக்கப்படுவது, உணவு பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அருவருப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “இனி வாழ்நாளில் கிரீம் ரோல் பக்கமே போக மாட்டேன்” என்றும், “இலாபத்திற்காக மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் இத்தகைய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தெருவோர கடைகளிலும் சிறிய பேக்கரிகளிலும் விற்கப்படும் தின்பண்டங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை வாங்கும் போது அதன் தயாரிப்பு முறை மற்றும் தரச் சான்றிதழை கவனிக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…
கேரேஜை நோக்கிச் செல்லும் ஒரு சாதாரண அன்றாடப் பயணம், ஒரு நொடியில் மிகக் கொடூரமான "கனவாக" மாறும் என்று 25…
ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…