“டீச்சர்னா கூலித் தொழிலாளியா..?” லேட்டா வந்தா சம்பளம் கட்.. ஒரு சம்பளத்துல டான்ஸ் வரைக்கும் எல்லா வேலையும் வாங்குறாங்க… தனியார் பள்ளி ஆசிரியையின் குமுறல் வீடியோ வைரல்..!!

Spread the love

தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஆசிரியர் ஒருவர், தனது பணியை ராஜினாமா செய்யும்போது தனக்கு நேர்ந்த துயரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட ஒரு நபர் ஊதியத்திற்கு, பல மனிதர்களின் வேலையைத் தன்னை வைத்து வாங்கியதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆங்கிலம், இலக்கணம், கணினி, உரையாடல் (Conversation) போன்ற பாடங்களை நடத்தச் சொன்னது மட்டுமன்றி, நடனப் பயிற்சியாளர் வேலையையும் தன்னையே செய்யக் கட்டாயப்படுத்தியதாக அவர் அந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், காலையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி ஒரு சில நிமிடங்கள் தாமதமாக வந்தாலும், அன்றைய நாள் முழு சம்பளமும் கழிக்கப்படும் என்ற கொடுமையான விதியை அங்கே பின்பற்றியுள்ளனர். அதுமட்டுமன்றி, தனது தாய்மொழியான இந்தியில் பேசினால் கூட சில சமயங்களில் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது ஆசிரியர் பணிக்கு முன்பிருந்த மதிப்பு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்றும், பாடம் நடத்துவதைத் தாண்டி புதிய மாணவர் சேர்க்கை (Admissions), பள்ளி விழாக்கள் மற்றும் இதர கூடுதல் வேலைகளைச் செய்யச் சொல்லி நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மிகுந்த கோபத்தோடும் மனவேதனையோடும் பேசிய அந்த ஆசிரியை, “இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் கல்வியாளர்களாக நடத்தப்படுவதில்லை, மாறாகக் கூலித் தொழிலாளர்களைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்” என்று சாடியுள்ளார். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த சம்பளம், அளவுக்கு அதிகமான வேலைப் சுமை மற்றும் இடைவிடாத மன அழுத்தம் ஆகியவை தற்போது பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் அன்றாடப் பிரச்சினையாக மாறியுள்ள சூழலில், அந்த இளம் ஆசிரியை எழுப்பியுள்ள இந்த கேள்விகள் முற்றிலும் நியாயமானதே என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

7 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

8 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

8 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago