#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசன் அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில் தன்னுடைய திரைப்படப் பணிகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விளக்குவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில் இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அதிக சம்பளம் வாங்கியது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை விசித்ரா தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளார்.
கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அவருக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அவர் 97 நாட்கள் இருந்து வெளியேறியதால் அவருக்கு 29 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெற்ற போட்டியாளர் விசித்ரா என்ற தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…