தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையிலான அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அதிகாரப்பூர்வமாக இடம்பெறுகிறது. தவெகவின் வெளிப்படையான அழைப்பை ஏற்று, தங்கள் கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகளின் விருப்பத்திற்கு இணங்க இந்த முடிவை எடுத்துள்ளதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்படி, விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு நாளை அமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகவும், அவருக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்ற போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்காக இரண்டு அமைச்சர் இடங்கள் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டிருந்தன. முதல்வர் விஜய் நேரடியாக திருமாவளவனிடம் பேசியதைத் தொடர்ந்து, இந்த அரசியல் நகர்வு தற்போது சாத்தியமாகியுள்ளது.
தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த விசிக, திடீரென தவெக அமைச்சரவையில் இணைந்தது ஏன் என்பது குறித்து திருமாவளவன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். ஆரம்பத்தில் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகவே விசிக முடிவு செய்திருந்தது. ஆனால், தவெக தரப்பில் இருந்து வந்த வெளிப்படையான அழைப்பும், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறையைக் கொண்டு வர வேண்டும்” என்ற விசிகவின் நீண்ட காலக் கொள்கை முழக்கமுமே தங்களை இந்த முடிவை நோக்கி நகர்த்தியதாக அவர் கூறினார். கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச்செயலாளர்களுடன் நடத்திய தீவிர ஆலோசனையின் கூட்டாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விசிகவின் இந்த முடிவைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெக அமைச்சரவையில் இணையவுள்ளது. பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவான ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திராவிட அரசியல் வரலாற்றில் முதல் முறையாகத் தமிழகத்தில் “கூட்டணி ஆட்சி” அதிகாரப்பூர்வமாக அரியணை ஏறுவது, விசிகவின் நீண்ட கால அரசியல் கனவை நனவாக்கியுள்ளதுடன், தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டு ஆட்சிக்கான சகாப்தத்தையும் தொடங்கி வைத்துள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…