மீண்டும் ஒரு அரசியல் ட்விஸ்ட்…. தவெக-விசிக இடையே சண்டை…. வன்னியரசு கொடுத்த அந்த ட்விஸ்ட்… அடுத்த பரபரப்பு…!

Spread the love

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியிருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் அதிரடி கருத்துதான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதால், அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும், இன்னும் தவெகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி அமைக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், எந்த நேரத்திலும் தவெக அமைச்சரவையில் இருந்து விசிக வெளியேறலாம் என்றும், அப்படி ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்றும் அவர் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்திலும், தவெகவினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக கூட்டணியில் வென்றுவிட்டு, தற்போது தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் இடம்பெற்றிருப்பது குறித்து திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தச் சூழலில், திருமாவளவனின் கருத்து விவாதப் பொருளாக மாறியதை அடுத்து, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பதும், அமைச்சரவையில் நீடிப்பதும் வெவ்வேறானவை என்றும், அமைச்சரவையில் இருந்து வெளியேறினாலும் தவெக ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு தொடரும் என்பதுதான் திருமாவளவனின் உண்மையான கருத்து என்றும், இதில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

மறுபுறம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக உட்கட்சி விழா ஒன்றில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இச்சம்பவம் குறித்து திருமாவளவனிடம் தாம் நேரடியாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். விசிகவால் தவெக அரசுக்கு எந்த காலத்திலும் ஆபத்து வராது என்றும், திமுகவின் சதிச் செயல்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையிலேயே திருமாவளவன் அப்படிப் பேசினார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், ஆட்சி அதிகாரப் பாதுகாப்பிற்காக விஜய் இந்த அமைச்சரவையை உருவாக்கவில்லை என்றும், நாளை தேர்தலே வந்தாலும் விஜய் தனித்து களம் காண்பார் என்றும் ஆதவ் அர்ஜுனா தீர்க்கமாகக் கூறினார்.

அமைச்சரவையில் கம்யூனிஸ்ட்கள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வரும் நிலையில், விசிக மற்றும் காங்கிரஸின் அடுத்தகட்ட நகர்வுகள் உற்று நோக்கப்படுகின்றன. “30 ஆண்டுகள் திமுக செய்யாததை, 30 நாள் ஆட்சியில் விஜய் செய்துள்ளார்” என்று ஆதவ் அர்ஜுனா தவெக அரசைப் பாராட்டியுள்ள நிலையில், திருமாவளவனின் இந்த ‘அமைச்சரவை வெளியேற்ற’ கருத்து தவெக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள அரசியல் கணக்குகளை மாற்றி அமைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

4 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

5 மணத்தியாலங்கள் ago