தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் “தூறல் நின்னு போச்சு”. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்யராஜை முன்னணி நடிகர் ஆக்கியது. இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கமே மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.
இதற்கிடையில் அவர் இளையராஜாவோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இசையமைப்பாளராகவும் மாறினார். அவரின் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு அவர்தான் இசையமைத்தார். மொத்தம் அவர் ஆறு படங்களுக்கு மேல் இசையமைத்தார். அதில் பெரும்பாலான பாடல்களை வாலி எழுதியுள்ளார்.
இந்நிலையில் பாக்யராஜுக்கு பாடல் எழுதுவது எவ்வளவு கடினமானது என வாலி ஒரு நிகழ்ச்சியில் ஜாலியாக பேசியுள்ளார். அதில் “நான் பாக்யராஜ் வீட்டுக்கு பாடல் எழுதப் போவேன். அவர் கொடுக்கும் ட்யூனுக்கு அவரின் சிகரெட் புகை நடுவே உட்கார்ந்து பாடல் எழுதுவதுதான் மிகப்பெரிய சிக்கல். அப்படி எழுதிக் கொடுத்தால் வரிகளையே பார்த்துக் கொண்டிருப்பார்.
அதற்குள் அவர் மனைவி கொடுக்கும் டிஃபனை எல்லாம் நான் சாப்பிட்டு முடித்துப் பார்த்தாலும் அப்படியே வரிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு முடிவே எடுக்க மாட்டார் மனுஷன். எனக்கு எரிச்சலாக இருக்கும். என் உதவியாளிடம் இனிமேல் பாக்யராஜ் பாட்டெழுத கூப்பிட்டால் வேண்டாம் என்று சொல்லிவிடு என்பேன். ஆனால் ஒரு பாட்டு முடிந்ததும், அவர் கவரில் வைத்து 5000 ரூபாய் கொடுப்பார். அதன் பிறகு ஏன் பாட்டெழுத மாட்டேன் என சொல்லப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…