#image_title
நடிகை ராதிகாவை பார்த்தால் எனக்கு சற்று பயம் இருக்கும் அதனால் அவர் நடிக்க கூப்பிட்டால் கூட அவாய்ட் பண்ணி விடுவேன் என்ற ஒரு பேட்டியில் நடிகை வடிவுக்கரசி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான சிவப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவுக்கரசி.
தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்குப் பொருந்தும் வகையில் சிறப்பாக நடிப்பார். இவரது முகம் மற்றும் கம்பீரக் குரல் இவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்த வடிவுக்கரசி 1979 ஆம் ஆண்டு கன்னிப்பருவத்திலே என்ற திரைப்படத்தில் ராஜேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு வெளியான முதல் மரியாதை படத்தில் வயதான கேரக்டரில் சிவாஜியின் மனைவியாக நடித்த அசத்தியிருப்பார். தொடர்ந்து ஏராளமான படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வந்த வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது இவர் தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி கொண்டிருக்கின்றார்.
சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் வடிவக்கரசி தற்போது டிவி சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்திருக்கின்றார்.. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு தனது வாழ்வில் நடந்த பல விஷயங்களை பற்றி பேசியிருந்தார் அதில் ராதிகா உடனடியாக உறவு குறித்து பேசி இருந்த வடிவுக்கரசி நடிகை ஸ்ரீபிரியா மூலமாக தான் ராதிகா எனக்கு அறிமுகமானார்.
நாங்கள் இருவரும் சேர்ந்து மெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தோம். மிகவும் தன்மையாக பழகக் கூடியவர். அவர் சந்தோஷமாக இருந்தால் சொல்லுங்கள் வடிவுக்கரசி அக்கா என்று மிகவும் பாசமாக பேசுவார். அதுவே சொல்லுங்க வடிவு என்று அவர் கூறுகிறார் என்றால் சற்று கோபமாக இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதனாலேயே அவருடன் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவேன். பலமுறை அவருடன் சீரியலில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வந்த போதிலும் அதை எப்படியாவது அவாய்ட் பண்ணி விடுவேன். அவர் மீது தனக்கு சற்று பயம் இருக்கின்றது. ஏதாவது கோபமாக பேசிவிட்டால் அல்லது சண்டை வந்துவிட்டால் அது சரியாக இருக்காது என்பதால் நான் அவரிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருப்பேன்” என்று அந்த பேட்டியில் வடிவுக்கரசி பேசியிருந்தார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…