பார்த்தால் தான் காதல் வருமா? பார்க்காமலேயே, கடிதம் மூலமே காதல் வரும் என்ற ஒரு புது டிரெண்டையே சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் காதல் கோட்டை. 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவையாணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ”காதல் கோட்டை.” தேவா இசையமைத்திருந்த இப்படம், ஹீரோ,ஹீரோயினும் ஒருவரைக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் காதலித்து வருவார்கள். பின் கடைசியில் இருவரும் சேர்வார்களா? சேர மாட்டார்களா? என்பது தான் கிளைமேக்ஸ்.
1996-ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், அந்த ஆண்டிற்கான சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்றது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இயக்குநரின் எழுத்துப் படி இருவரும் சேரமாட்டார்கள். ஆனால் தயாரிப்பாளரின் கோரிக்கைக்கு இணங்க இருவரையும் இறுதியில் இணைத்திருப்பார் இயக்குநர் அகத்தியன். இருவரும் சேரும் படி வைத்ததால் தான் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது எனவும், ஒருவேளை பிரிவது போல் வைத்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என இயக்குநர் அகத்தியர் நிறைய நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
அதேப் போல இப்படம் பற்றின ஒரு சுவாரஸியமான விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் கவலைப் படாதே சகோதரா என்றப் பாடலை இயக்குநர் அகத்தியனே எழுதியிருக்கிறார். மீத பாடல்களை கவிஞர் வாலியை எழுதி தருமாறு கேட்டுள்ளனர் படக்குழு. தேவா இப்பாடலுக்கு இசையமைத்தும் முடித்துள்ளார். பிறகு ராஜஸ்தானிற்கு சென்று விட, வாலியிடம் இப்படத்திற்கு பாடல் எழுதும் படி கேட்டுள்ளனர்.
அவரும் படத்தில் எத்தனை பாடல்கள் எனக் கேட்க, 6 பாடல் எனக் கூற, முதல் பாடலை அகத்தியன் எழுதி முடித்துள்ளார், மீதமுள்ள பாடல்களை நீங்கள் எழுத வேண்டும் என கேட்க, கோபத்தில் அவருக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என மறுத்து விட்டாராம். பிறகு வேறு கவிஞரை அணுக, அவர் ஒரு மாதம் ஆகும் எனக் கூற, அவ்வளவு நாட்கள் இல்லை என்பதால் அனைத்துப் பாடல்களையும் இயக்குநர் அகத்தியனே எழுதினாராம்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…