Categories: CINEMA

சென்சாரை ஏமாற்றி எப்படியோ MGR பாடலில் அந்த வார்த்தையை வைத்த வாலி… எந்த பாடல்? என்ன வார்த்தை தெரியுமா?

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.

அதன் பிறகுதான் தன்னுடைய படங்களில் வாலியை பாடல் ஆசிரியராக பயன்படுத்த ஆரம்பித்தார் எம் ஜி ஆர். வாலி வந்த பின்னர் எம் ஜி ஆரின் பாடல்கள் தன்மை மாற ஆரம்பித்தன. தன்னுடைய கட்சிக் கொள்கைகளை எல்லாம் வாலியின் மூலம் பாடல் வரிகளாக இடம்பெறச் செய்தார் எம் ஜி ஆர். அப்படி இடம்பெற்ற ஒரு பாடல் வரியால் சென்சாரில் பிரச்சனை வரும் அளவுக்கு சென்றுள்ளது.

எம் ஜி ஆர் ஏவிஎம் நிறுவனத்துக்காக நடித்த ஒரே படம் அன்பே வா. இந்த படத்தில் எம் ஜி ஆர் காஷ்மீருக்கு செல்லும் பாடல் காட்சியில் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல் இடம்பெறும். அந்த பாடலை எழுதிய வாலி  இடையில் ‘உதய சூரியனின் பார்வையிலே உலகம் முழித்திக்கொண்ட வேளையிலே’எம் ஜி ஆரின் திமுக சின்னமான உதயசூரியனை இடம்பெறச் செய்துள்ளார். ஆனால் இந்த வார்த்தைக்கு சென்சாரில் சிக்கல் வருமோ என்ற சந்தேகமும் படக்குழுவினருக்கு இருந்துள்ளது.

எதிர்பார்த்தது போலவே சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து பாடல் வரியை மாற்ற சொன்னார்கள். அப்போது உதய சூரியனை மாற்றி ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என மாற்றியுள்ளார் வாலி. ‘அதென்ன புதிய சூரியன்?’ எனத் தயாரிப்பாளர் கேட்க ‘படத்தில் எம்.ஜி.ஆர் பாடும்போது அது உதயசூரியன் என்றுதான் கேட்கும். தியேட்டரில் கைதட்டல் பறக்கும்’ என சொன்னார் வாலி. அவர் சொன்னது போலவே நடந்தது.

vinoth

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

1 hour ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

16 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

16 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

18 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

18 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

21 hours ago