மீண்டும் உலகப்போர்?… அடுத்த வாரமே ஈரானுக்குள் நுழையும் அமெரிக்கப் படைகள்… கசிந்த ரகசியத் திட்டம்….!

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான சமாதான பேச்சுவார்த்தையில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பிரம்மாண்ட ராணுவ தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ம் தேதி தற்காலிகமாக முடிவுக்கு வந்த போருக்குப் பின், அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்ற ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்பட மறுத்துவிட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே நிலவி வந்த அமைதி குலைந்து, தற்போது மீண்டும் போர் வெடிக்கும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள திடுக்கிடும் செய்தியின்படி, வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் பியூரி 2.0’ (Operation Epic Fury 2.0) என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அதிகாரிகள் திட்டங்களை வகுத்துள்ளனர். இதனை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரிகள் தரப்பில், அடுத்த வாரமே ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என்பதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரமாக தயாராகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த முறை நடத்தப்படும் தாக்குதல் முந்தைய போரை விட மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அமெரிக்கப் படைகள் ஈரானின் ராணுவ உள்கட்டமைப்புகளை வான்வழியாகத் தாக்குவதோடு மட்டுமின்றி, நேரடியாக அந்நாட்டிற்குள் தரைவழியாக இறங்கவும் திட்டமிட்டுள்ளன. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்றுவது அல்லது அவர்களின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான ‘கார்க் தீவை’ (Kharg Island) தன்வசப்படுத்துவதுமே அமெரிக்க வீரர்களின் முக்கிய இலக்காக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இந்த தரைவழி ஊடுருவலுக்கு ஈரான் மிகக் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்பதால், உயிர்ச்சேதங்கள் அதிகரித்து போர் சூழல் கைமீறிப் போகும் அச்சம் எழுந்துள்ளது.

மறுபுறம், ஈரான் தனது எல்லையிலுள்ள முக்கிய கடல்வழியான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) மூடிவைத்துள்ளதால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்து தீவிரமாக விவாதித்துள்ளார். “ஈரான் எங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் சிதைக்கப்படுவார்கள்” என டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலகரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“டிசிஎஸ் சிஇஓ-வின் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா?… வெளியான தலைசுற்ற வைக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கை”…!!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வெளியிட்டுள்ள புதிய ஆண்டு அறிக்கையின்படி, அதன் தலைமை…

10 minutes ago

“சுவீடனில் நான் வாங்கிய பட்டம்… உங்களால் தான்!”.. தமிழக மாணவனின் உருக்கமான பதிவு… மு.க.ஸ்டாலினின் நெகிழ்ச்சியான பதில்…!!!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர், சுவீடன் நாட்டில் உள்ள உலகின் முன்னணி…

22 minutes ago

“விஜய் ஆக்‌ஷன் மோட்..! பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிக்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!”

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து, அதனை முழுமையாக ஒழிப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு…

31 minutes ago

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..! முதலமைச்சர் விஜய் ஆளுநரிடம் கொடுத்த ரகசியப் பட்டியல்… உள்ளே இருக்கும் புதிய முகங்கள் யார்..?

தமிழ்நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அமைச்சர்கள் பட்டியலை, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்போதைய ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். தமிழக…

31 minutes ago

“ப்ளீஸ்.. விஜயோடு என்னை ஒப்பிடாதீங்க!”… ரசிகர்களின் டார்ச்சரால் ஓப்பனாக கதறிய பவன் கல்யாண்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய்…

38 minutes ago

“டாக்டர்களே வாயடைச்சு போயிட்டாங்க… சிசேரியன் இல்ல.. வெறும் சுகப்பிரசவம் தான்… 4 குழந்தைகளை அசாத்தியமாக பெற்றெடுத்த 31 வயது தாய்.. குவியும் வாழ்த்துகள்!

உத்தரப் பிரதேசம் மொராதாபாத் பகுதியில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அரிய மருத்துவ நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சம்பல்…

49 minutes ago