தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பைக் காட்டியுள்ள விஜய்யின் போர்ட்ஃபோலியோவில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை (சுமார் 17 சதவீதம்) வங்கி நிலையான வைப்புத் திட்டத்தில் (Fixed Deposit) வைத்திருப்பதுதான் நிதி ஆலோசகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. ஒரு மாஸ் லீடரின் இந்த முதலீட்டு அணுகுமுறை பாதுகாப்பானதாகத் தெரிந்தாலும், நவீன பொருளாதாரச் சூழலில் இது ஒரு ‘முதலீட்டுச் சறுக்கல்’ என்றே விமர்சிக்கப்படுகிறது.
இந்த 100 கோடி ரூபாய் எஃப்டி ஏன் விமர்சிக்கப்படுகிறது என்றால், அதன் பின்னால் இருக்கும் ‘பணவீக்கம்’ (Inflation) எனும் காரணிதான். எஃப்டி மூலம் கிடைக்கும் 6.5% வட்டி வருமானத்தில், தற்போதைய 3% பணவீக்கத்தைக் கழித்துப் பார்த்தால், உண்மையான லாபம் (Real Return) வெறும் 3.5% மட்டுமே. இவ்வளவு பெரிய தொகையை கையில் வைத்துக்கொண்டு, வெறும் 3.5 சதவீத வளர்ச்சியை மட்டும் இலக்காகக் கொள்வது ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவாக இருக்க முடியாது என நிபுணர்கள் கருதுகின்றனர். வரிச் சலுகை மற்றும் நீண்ட கால வளர்ச்சியைக் கணக்கில் கொண்டால், இந்தத் தொகை தேக்கமடைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கு மாற்றாக, இந்த 100 கோடி ரூபாயை இன்னும் ‘ஸ்மார்ட்’ ஆகப் பிரித்து முதலீடு செய்திருக்கலாம் என்பது ஆலோசகர்களின் கருத்து. உதாரணமாக, இதில் ஒரு 50 கோடி ரூபாயை அரசுப் பத்திரங்கள் (Govt Bonds) அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் (Debt Funds) முதலீடு செய்திருந்தால், எஃப்டியை விட கூடுதல் பாதுகாப்போடு வரிச் சலுகைகளையும் பெற்றிருக்க முடியும். மீதமுள்ள 50 கோடியைச் சற்று ரிஸ்க் எடுத்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், காலப்போக்கில் அந்தப் பணம் பல மடங்கு பெருகி, எஃப்டி வருமானத்தை விடப் பன்மடங்கு லாபத்தைத் தந்திருக்கும்.
ஒரு தேர்ந்த முதலீட்டாளராக இருந்தால், இத்தகைய பெரும் தொகையை ‘ஹைப்ரிட் ஃபண்ட்’ (Hybrid Fund) போன்ற திட்டங்களில் பிரித்து முதலீடு செய்து, அதில் SWP (Systematic Withdrawal Plan) வசதியைப் பயன்படுத்தியிருக்கலாம். இதன் மூலம் மாதாமாதம் ஒரு நிலையான வருமானம் கைக்குக் கிடைப்பதோடு, மீதமுள்ள அசல் தொகை சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து கொண்டே இருக்கும். பாதுகாப்பை மட்டுமே பிரதானமாகக் கருதி எஃப்டியில் முடக்கியுள்ள விஜய்யின் இந்த முடிவு, அரசியலில் அவர் காட்டும் அதிரடிக்கு நேர்மாறாக, முதலீட்டில் ஒரு ‘பழமைவாத’ அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…
சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…