தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு திமுக ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர மறுபக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சியை நிலைநாட்ட பல திட்டங்களை தீட்டி வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமையும் என்று யூகங்கள் எழுந்தன. அதிமுக பரப்புரையில் தமிழக வெற்றி கழகம் கொடி பறந்தது அதற்கு மேலும் வலு சேர்த்தது. இப்படியான நிலையில் 2026 தேர்தலில் தனித்து களம் காணவே விஜய் முடிவு செய்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். திமுக மற்றும் பாஜகவோடு கூட்டணி இல்லை என விஜய் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…
யுரேமியா என்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சீனப் பெண், புற்றுநோய் நோயாளியின் சிறுநீரகத்தைப் பெறுவதற்காக அவரை மணந்தார். ஆனால்,…