தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அவர் தோல்வியடைவார் என்றும், சுமார் 200 தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெபாசிட் பெற 16.6% வாக்குகள் தேவை என்ற நிலையில், தவெக 8% முதல் 12% வாக்குகள் மட்டுமே பெறும் என அவர் தெரிவித்துள்ளார். பூத் ஏஜென்ட்களைக் கையாள்வதிலும், புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தவெக தவறிவிட்டதே இந்த பின்னடைவுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சூழலில், வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பணிகளைக் கண்காணிக்க தவெக-வின் இடைக்காலக் குழுத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையனை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து விஜய் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கட்சி முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து செங்கோட்டையன் விளக்கமான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள நிலையில், தேர்தல் களத்தில் தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகள் உற்றுநோக்கப்படுகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…