தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதோடு எளிதாகப் பெரும்பான்மையை எட்டிவிடலாம் என விஜய் தரப்பு கணக்குப் போடுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தவெக உடனான கூட்டணிக்குத் தங்களது ஆதரவை ரகசியமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் திருப்பங்கள் திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என்று மாணவர்கள்…
தமிழக அரசியலின் அச்சாணியாக விளங்கிய அதிமுக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர்ச்சியான உட்கட்சிப் பூசல்களைச் சந்தித்து…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கான…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்…