தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகை வாக்குச் சிதறலை ஏற்படுத்தும் என்பதால் பிரதான கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. இந்தச் சூழலில், பல்வேறு அமைப்புகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் மற்றும் கிறிஸ்தவ உரிமை இயக்கம் ஆகியவை திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குத் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவும், பெரும்பான்மைவாத சக்திகளைத் தோற்கடிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. தற்போதைய திமுக ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்படும் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் புதுமைப் பெண் போன்ற திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், தொழில்துறை வளர்ச்சி மற்றும் கல்விச் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதையும் அவர்கள் தங்களது கூட்டறிக்கையில் பாராட்டியுள்ளனர்.
மறுபுறம், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, திராவிடக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டதாகக் கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. நாடு முழுவதும் தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற கொள்கைத் திணிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். மேலும், தமிழக வெற்றிக் கழகம் பாஜகவை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டாலும், அதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், அதனால் திமுக தலைமையிலான கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால், அவரது கட்சிக்குக் கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிஷப் கவுன்சில் அவரை நம்பாமல் திமுக – காங்கிரஸ் பக்கம் சாய்ந்தது தவெக தொண்டர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே கிறிஸ்தவர்களின் வாக்குகள் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமாகவே இருந்து வரும் சூழலில், தற்போது அதிமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இந்த ஆதரவு மறுக்கப்பட்டிருப்பது தேர்தல் களத்தில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…