‘ஓடுவதை நிறுத்து’.. ஓடும் ரயிலில் அநாகரிகம்.. 3 முறை தப்பாக தோட்ட காமுகன்.. பெண் கொடுத்த அதிரடி ‘நோஸ் கட்’.. இணையத்தில் வைரலாகும் ‘சிட்னி இரயில்’ மோதல் வீடியோ..!!

Spread the love

சிட்னியில் ஓடும் ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்பும் தற்பொழுது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. சிட்னியின் வடமேற்குப் பகுதியில் உள்ள வின்யார்ட் மற்றும் எப்பிங் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணித்த ரயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது. ரயிலில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை, பின்னால் இருந்த நபர் ஒருவர் பயணத்தின்போது மூன்று முறை மிகத் தகாத முறையில் தொட்டு அநாகரிகமாக நடந்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்த அந்தப் பெண், மூன்றாவது முறை உடனடியாகத் திரும்பிப் பார்த்துத் தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த அந்த ஆசாமியைக் கச்சிதமாக அடையாளம் கண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சும்மா இருந்துவிடாமல், பெட்டிக்குள்ளேயே அந்த நபரை அதிரடியாக எதிர்கொண்டு கேள்வி எழுப்பினார். நிலைமை தீவிரமடைவதைக் கண்ட அந்த நபர் பயந்துபோய் தொடர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். எனினும் அவரை சும்மா விடக் கூடாது என்று முடிவெடுத்த அந்தப் பெண், ரயிலின் அவசரகால இன்டர்காம் (ஒலிபெருக்கி) அமைப்பைப் பயன்படுத்திப் போக்குவரத்து ஊழியர்களைத் தொடர்பு கொண்டு உதவி கோரினார். மேலும், நார்த் ஸ்ட்ராத்ஃபீல்ட் ரயில் நிலையத்தில் அந்த நபர் தப்பி ஓட முயன்றபோது, அவரைத் தடுத்து நிறுத்த முயன்றதுடன், தன் கைபேசி மூலம் அந்த மோதலையும், அந்த நபரின் உருவத்தையும் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் துணிச்சலுடன் பதிவு செய்தார்.

இந்த அதிர்ச்சிச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்து, தன்னிடம் இருந்த வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை ஒப்படைத்தார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், முதற்கட்டமாக ரயில் பெட்டிகள் மற்றும் நிலையங்களில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டும் இச்சம்பவம் இணையத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Muthu Mani

Recent Posts

டி.கே.சிவக்குமாருக்கு பயமா..? மேகதாது அணைக்கு எதிராக.. முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்..? கே.என்.நேரு காட்டம்..!

கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…

16 minutes ago

3,000 கி.மீ தூரம்… சீனாவில் இருந்து ஹைதராபாத்தில் ஆபரேஷன்..! இந்தியாவின் முதல் 5G ரோபோடிக் செய்த பிரம்மாண்ட மருத்துவம்.. வியக்க வைக்கும் சாதனை…!

சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…

18 minutes ago

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

35 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

37 minutes ago

பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…

38 minutes ago

“வெறும் 20 அடிதானே” 7 வயது சிறுவனை அடித்து கை, அந்தரங்க உறுப்பை உடைத்த கொடூர முதல்வர்… பெற்றோர்களிடம் சொன்ன அலட்சிய பதில்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…

54 minutes ago