விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்த பிறகு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசி இருந்தார். ராகுல் காந்தியின் பிரதிநிதியாக விஜயை சென்று சந்தித்து பேசினார்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள தலைவர் விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. காங்கிரஸில் ராகுல் காந்தி புதிதாக தொடங்கிய Data Analyst பிரிவின் தலைவராக பிரவீன் சக்கரவர்த்தி செயல்பட்டு வருகின்றார். இந்த சந்திப்பு அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகருடன் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். நண்பர் என்ற முறையில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரை சந்தித்ததாக திருச்சி வேலுசாமி தெரிவித்துள்ளார். இருந்தாலும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகியாக இருக்கும் அவர் விஜயின் தந்தையை சந்தித்து பேசியது கூட்டணிக்காகவா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் TVK சார்பில் கோரப்பட்ட பேரணிக்கு (roadshow) அனுமதி மறுக்கப்பட்டு, திறந்தவெளி பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…
மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…