#image_title
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர் பி சௌத்ரி. அவர் படங்களின் தனிச்சிறப்பே புதுமுக இயக்குனர்களைக் கொண்டு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து சூப்பர் ஹிட் கொடுத்ததுதான். இதுவரை அவர் 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுபோல 95 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
தன்னுடைய நிறுவனத்தின் 100 ஆவது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் அது நடப்பதற்கான சூழல் இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் விஜய் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து விட்டதால் இன்னும் ஒரே ஒரு படம்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
tirupur subramanian
விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சியில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அவரின் முதல் ஹிட் படமான பூவே உனக்காக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் லவ் டுடே, துள்ளாத மனமும், ஷாஜகான் மற்றும் திருப்பாச்சி என இவர்கள் இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. கடைசியாக 2014 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் உருவான ஜில்லா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.
இதுபற்றி பேசியுள்ள திரையரங்க உரிமையாளரும், ஆர் பி சௌத்ரியின் நெருங்கிய நண்பருமான திருப்பூர் சுப்ரமண்யம் “விஜய்க்கா ஆர் பி சௌத்ரி கதை கேட்டு ஓகே பண்ண அனைத்து படமும் ஹிட்டு. ஆனால் விஜய் கதை கேட்டு ஓகே பண்ணி சௌத்ரி சாரிடம் அனுப்பிய ஜில்லா படம் தோல்விப் படமாக அமைந்தது. அதனால் ஹீரோக்களை நம்பி இயக்குனர்கள் செல்வதை விட்டு தயாரிப்பாளர்களிடம் செல்லவேண்டும்” என்று பேசியுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…
பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…
இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…