#image_title
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். அவரை நடிப்புப் பல்கலைக் கழகம் என்றே சொல்லலாம். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
நாடக உலகில் இருந்து வந்ததால் அவருக்கு நாடகத்தின் மேல் அளவற்ற காதல் இருந்தது. அதனால்தான் சில ஆண்டுகள் அவர் தன்னுடைய நாடகக் குழு ஒன்றையும் தொடர்ந்து நடத்தி வந்தார். அடிக்கடி நாடகங்களை சென்று பார்க்கும் வழக்கமும் அவருக்கு இருந்துள்ளது. அப்படி நாடகங்கள் பார்க்கும் போது அவை பிடித்துவிட்டால் அவற்றை சினிமாவாக்கி நடிக்கவும் அவர் தயங்கியதில்லை.
அப்படி ஒரு முறை அவர் நகைச்சுவை நாடகம் ஒன்றை பார்க்க சென்று அதில் நடித்த ஒரு நடிகரை பார்த்து வியந்துள்ளார். இத்தனைக்கும் அவர் முழுநேர நடிகர் கூட இல்லையாம். அந்த நாடகத்தின் கதாசிரியராம். சித்ராலையா கோபு எழுதி நடித்த ஒரு நாடகத்தை பார்க்க சென்றுள்ளார். ஒரு பாட்டு வாத்தியார், இளமையான தோற்றத்துக்கு மாறும் வகையில் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார்.
அந்த மருந்தை அவரது மனைவி தவறுதலாக தண்ணீரில் கலந்துவிடுகிறார். இந்த தண்ணீரை குடித்த அந்த குடும்பத்தினர் அனைவரும் இளமையாக மாறிவிடுகின்றனர். ஆனால் இளமையாக மாறிய பின்னர் அவர்கள் ஏனோதானோவென்று நடந்துகொள்வதை நகைச்சுவையாக உருவாக்கியதுதான் அந்த நாடகம்.
தண்ணீர் குடித்து இளைஞராக மாறிய அந்த பாட்டு வாத்தியார் கர்நாடக சங்கீதத்தில் இருந்து மாறி மாடர்ன் உலக பாடல்களை பாடி ரசிகர்களை சிரிக்கவைத்துள்ளார். இந்த பாட்டு வாத்தியார் கேரக்டரில் நடித்தவர் சித்ராலையா கோபு. இவரின் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவாஜி கணேசன், நாடகம் முடிந்தவுடன், தனது டிரைவரை விட்டு, இந்த நாடகத்தில் நடித்த சித்ராலையா கோபு மற்றும் இயக்கிய கோபி ஆகிய இருவரையும் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
வந்தவர்களிடம் “கோபு, நீ நல்லா கதை எழுதுவன்னு தெரியும், நல்லா காமெடி பண்ணுவன்னு தெரியும். ஆனால் இவ்ளோ சிறப்பா நடிப்பன்னு எனக்குத் தெரியாதுடா” என வியந்து பாராட்டி விருந்து வைத்துள்ளார்.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…