சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியில் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தால் 19 வயது இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணியனூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சந்துரு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 9-ஆம் வகுப்பு மாணவர் சுதன் மற்றும் பீகாரைச் சேர்ந்த சேட்டன் ஆகிய மூவரும் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கோகுல் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் கோகுலுக்கும் சுதனுக்கும் இடையே பண விவகாரத்தில் மோதல் இருந்தாலும், பின்னர் அனைவரும் நண்பர்களாகி ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
சம்பவத்தன்று இரவு, கோகுல் தனது நண்பர்களான சந்துரு, சுதன் மற்றும் சேட்டன் ஆகியோரை ஜருகுமலை அடிவாரப் பகுதிக்கு “ட்ரீட்” தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, சுதனுக்கும் கோகுலுக்கும் இடையே பழைய பகை குறித்து மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சிறுவர்கள் மூவரும் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து, சுதனுக்கு ஆதரவாக கோகுலுடன் மல்லுக்கட்டியுள்ளனர். இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலை சரமாரியாகக் குத்தி, அவரது முகத்தைச் சிதைத்துத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளனர்.
இந்த கொடூரச் செயலைச் செய்ததோடு நிறுத்தாமல், கோகுல் கொல்லப்படுவதை அச்சிறுவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படும் தகவல் பார்ப்போரை உறைய வைக்கிறது. கொலைக்குப் பின் அங்கிருந்து தப்பியோட முயன்ற சந்துரு மற்றும் சுதன் ஆகிய இருவரை அந்தப் பகுதி மக்கள் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். உடனடியாக அவர்கள் மல்லூர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தப்பியோடிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் சேட்டனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பள்ளி செல்லும் வயதிலேயே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, ஒரு உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சிறுவர்கள் துணிந்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் மோகம் மற்றும் போதைப் பழக்கத்தால் தடம் மாறும் சிறுவர்களை நல்வழிப்படுத்தப் பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களிடம் மல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, அந்த வீடியோ ஆதாரம் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தனது கணவன் மற்றும் 6 வயது பிஞ்சு மகளைத் தவிக்கவிட்டு, இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் ஓடிச் சென்ற சம்பவம்…
திருமண மேடையில் மணமகன் கழுத்தில் மாலை சூட வேண்டிய நேரத்தில், மணமகனைப் பார்த்தவுடன் மணப்பெண் திருமணத்தை நிறுத்தச் சொன்ன அதிர்ச்சி…
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணம் முடிந்த 14-வது நாளிலேயே மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சரியாக நள்ளிரவு 12:07 மணி. நிஷா தனது புதிய பிளாட்டில் முதல் முறையாக தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே மெல்லிய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், மக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு…
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…