செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், செய்யூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சிந்தனைச் செல்வனை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது அதிமுக மற்றும் பாஜகவின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர்கள் கொள்கை ரீதியான திட்டங்களைக் கூறாமல், வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் வழங்குவதாகக் கூறி கூப்பன் விநியோகித்து வாக்குகளைப் பெற முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் கட்சி தொடங்கிய நடிகர்களை விமர்சித்த திருமாவளவன், முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதாகக் கூறினார். பல ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்கள் பணிக்கு வந்ததாகக் கூறினாலும், அவர்களின் உண்மையான நோக்கம் பதவி மட்டுமே என்று சாடினார். விசிக நினைத்திருந்தால் பல கட்சிகளுடன் கூட்டணி பேரம் பேசி அதிக இடங்களைப் பெற்றிருக்க முடியும் என்றும், ஆனால் கொள்கை பிடிப்பு காரணமாகவே திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்தார்.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் பின்னணி குறித்துப் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், ஒருவேளை விசிக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி பாஜகவைச் சேர்த்திருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி எவ்விதக் காரணமுமின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் குறித்து எச்சரித்த திருமாவளவன், தவறுதலாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானால், இரண்டு மாதங்களுக்குள் அவரது பதவி பறிக்கப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தார். அவருக்குப் பதிலாக எச். ராஜா, அண்ணாமலை அல்லது நயினார் நாகேந்திரன் போன்ற பாஜக தலைவர்களை முதலமைச்சராக்க பாஜக முயற்சிக்கும் என்றும், எனவே மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தவிர்த்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…