தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார்.
அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார். இவர் முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்த நிலையில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.
இப்படியான நிலையில் எம்ஜிஆர் அரசியலில் நுழைந்து முதலில் திமுகவில் இருந்த நிலையில் அதன் பிறகு திமுகவிலிருந்து விலகி அதிமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் கடன் சுமையால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருப்பதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி இருந்தது. அப்போது தனது கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காக எம்ஜிஆர் சுற்றுப்பயணம் சென்றார். அந்த சமயத்தில் எம்ஜிஆரை சந்திக்க வேண்டும் என்று 80 வயது மூதாட்டி ஆவலுடன் கேட்க எம்.ஜி.ஆரும் அந்த மூதாட்டியை சந்தித்தார். அப்போது நான் உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்று எம்ஜிஆர் அந்த மூதாட்டியை பார்த்து கேட்க அந்த மூதாட்டி தான் கையில் வைத்திருந்த சுருக்கு பையை எடுத்து அதிலிருந்த பணத்தை எம்ஜிஆரின் கையில் திணித்தார்.
தம்பி நீ கட்சி ஆரம்பித்து கடன் சுமையால் இருப்பதாக செய்திகள் மூலமாக நான் அறிந்தேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீ அரசியலுக்கு வந்து விட்டாய் பணத்தைப் பற்றி நீ கவலைப்படாதே மாதம் என்னால் முடிந்த பணத்தை நான் உனக்கு தருகிறேன் என்று அந்த மூதாட்டி கூறியுள்ளார். இந்த வார்த்தையை கேட்டதும் எம்ஜிஆர் அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதன் பிறகு அந்த மூதாட்டியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்த எம்ஜிஆர் அவருக்கு ஒரு மகனாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து உதவியுள்ளார். இப்படி மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர்களில் எம்ஜிஆருக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…