சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கோயில் பிரசாதம் என்று கூறி மயக்க மருந்து கலந்த பால்கோவாவை கொடுத்து பெண்களிடம் நகை திருடிய ரவணம்மா என்ற பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாகி பல லட்சங்களை இழந்த இவர், அந்தக் கடனை அடைப்பதற்காக இந்த நூதன திருட்டு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து, இனிப்பு கொடுத்து அவர்கள் மயங்கியதும் நகைகளை அபேஸ் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட இவரிடமிருந்து சுமார் 19.5 சவரன் தங்க நகைகளை ஜாம்பஜார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில், ரவணம்மா ஏற்கனவே கொடியரசி என்ற பெண்ணிடம் 21 சவரன் நகைகளை இதே பாணியில் திருடியது அம்பலமானது. தற்போது சுஜாதா என்பவரிடம் 6 சவரன் நகையைப் பறிக்க முயன்றபோது கச்சிதமாகப் பிடிபட்டார். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும், யாரையும் சந்தேகத்திற்கிடமாக வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் சென்னை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னம்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான கானா வினோத், இறுதிப் போட்டி வரை செல்லும் வாய்ப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக ஒரு நூதனமான தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம்…