தலைமைச் செயலகத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் வந்து “முதலமைச்சர் விஜய் எங்குள்ளார்? அவரைப் பார்க்க வேண்டும்” எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் பதவியேற்று, பொறுப்புகளை ஏற்கும் வகையில் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த சமயத்தில் இந்தத் திடீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிறிஸ்டல் என்ற அந்தப் பெண், புதுக்கோட்டை காவல்துறை அதிகாரிகள் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, எவ்விதக் காரணமும் தெரிவிக்காமல் தனது கணவர் முருகேசனை அழைத்துச் சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் (CM Cell) புகார் அளிக்க வந்த தன்னை, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, குற்றவாளியைப் போல நடத்துவதாகக் கூறி அவர் கண்ணீருடன் வாக்குவாதம் செய்தார். தனது கணவரின் பாதுகாப்புக்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடவே அங்கு வந்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைச் செயலகப் போலீசார் புதுக்கோட்டை காவல்துறையினரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புதிய தகவல் வெளிவந்துள்ளது. கிறிஸ்டலின் கணவர் முருகேசன், வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்துள்ளதாகவும், அதுகுறித்த விசாரணைக்காகவே போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…