தமிழகத்தில் மே மாதம் கடும் மின்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்துறை எச்சரித்துள்ளது. கோடை வெயில் காரணமாக மின் தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் குறைந்த விலை மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இனி ஏல முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்றும், அதன் சுமை மக்கள் மீது மின்கட்டண உயர்வாக இறக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 6,998 மெகாவாட் மின்சாரத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை அந்தந்த மாநிலங்களே சந்திப்பதால், மின் உற்பத்தியில் அந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிப்பது சலுகையல்ல, அது அவர்களின் உரிமை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியம் இந்த முடிவால் மேலும் பாதிக்கப்படும் என்பதால், பழைய முறையிலேயே குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…