வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்திற்குப் பிறகு, சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் ஆனந்தக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட உருக்கமான கருத்துக்கள் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சஞ்சு சாம்சன் தனது திறமையை நிரூபித்த தருணத்தில், ஒரு தந்தையாக அவர் அனுபவித்த மன அழுத்தத்தையும் இறைவனிடம் அவர் வைத்த வேண்டுதலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தனது மகனின் ஆட்டம் குறித்துப் பேசிய அவர், “நேற்று காலை 6 மணி முதல் போட்டியின் கடைசி பந்து வரை நான் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தேன். அந்த நேரத்தில் வந்த யாருடைய தொலைபேசி அழைப்பையும் நான் ஏற்கவில்லை. என் மகனின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொடுக்கும்படி மட்டுமே கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அவனுக்கான ஒரு நாளைக் கொடுங்கள் என்று என் வாழ்நாளில் முதல்முறையாகக் கடவுளிடம் கையேந்தி கேட்டேன்,” என்று தழுதழுத்த குரலில் தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்கப் போராடி வரும் சூழலில், இந்த இன்னிங்ஸ் அவருக்குப் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஒரு வீரராக சஞ்சு சந்தித்த விமர்சனங்களைக் கடந்து, அவரது தந்தை வெளிப்படுத்திய இந்தத் தூய்மையான அன்பு மற்றும் ஏக்கத்தின் வெளிப்பாடு, விளையாட்டுத் துறையில் ஒரு வீரரின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் குடும்பத்தின் தியாகத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இந்திய விமானப்படை (IAF) சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. "இந்தியா…
மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச்…
மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…
மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…