ஹாபூர் மாவட்டத்தில் புதிய கனவுகளுடன் புகுந்தகத்திற்குச் சென்ற பெண் ஒருவர், தனது கணவன் மற்றும் குடும்பத்தினரால் கடுமையான கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறி வெளியிட்டுள்ள கண்ணீர்மல்கும் காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகுந்தகத்தார் தன்னைத் தொடர்ந்து தாக்கி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சுமார் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த தான் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களால் கருக்கலைப்புக்கு ஆளானதாகவும், தனது மாமனார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவர் அந்த வீடியோவில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/MandeepRajBhar9/status/2081409022381707486/photo/1
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தச் சம்பவத்தின் மூலம், தன் தந்தையிடம் தன்னை மீட்குமாறு அப்பெண் கதறி அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அருண், தனது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக்…
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…
உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…
தமிழக சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது, இந்தத்…
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடையும் இவ்வேளையில், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துக்…
ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பிஸ்மில்லா காலனியில் தங்கி பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது…