“2 பிள்ளையும் பாக்கல” 10 மாசம் சுமந்து பெத்த வயிறு எப்படி பாடுபடும்… நோய்வாய்ப்பட்ட தாயை சுடுகாட்டில் கொண்டு விட்டுச்சென்ற மகன்… கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி..>!!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பெற்ற தாயையே சுடுகாட்டில் அனாதையாக விட்டுச் சென்ற மகனின் கொடூரமான செயல் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. மதுராவைச் சேர்ந்த ரஜ்ஜோ தேவி என்ற முதியவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த அவரை, ஒரு மகன் சனிக்கிழமை இரவு ஆக்ராவிலுள்ள நியூ ஆக்ரா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஒரு சுடுகாட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவரைத் தனியாக விட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

தகவலறிந்து வந்த போலீசார், மயக்க நிலையில் இருந்த ரஜ்ஜோ தேவியை மீட்டு சிகிச்சைக்காக எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் கண்ணீருடன் பேசிய அந்தத் தாய், “பெற்று வளர்த்த இரண்டு மகன்களுமே என்னைக் கவனிக்கவில்லை; ஒருவன் என்னைத் தூரமான இடத்திற்குக் கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றுவிட்டான்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பெண் சிகிச்சையில் உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் தலைமறைவான மகனைப் பிடிப்பதற்கான விசாரணையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
Soundarya

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

8 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

9 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

9 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

9 மணத்தியாலங்கள் ago