பஞ்சாப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைக்காக வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் உள்ள அவரது தாய் காலமான செய்தி கேட்டு அவர் நிலைகுலைந்து போனார். சூழ்நிலை காரணமாகத் தனது தாயின் இறுதிச் சடங்கில் நேரில் கலந்துகொள்ள முடியாத அந்த இளைஞர், வீடியோ அழைப்பு மூலமாகவே தனது தாயின் முகத்தைக் கடைசியாகக் கண்டு கதறி அழுதுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ள இந்தக் காணொளியில், மொபைல் திரையில் தெரியும் தனது தாயின் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் முத்தமிட்டு அவர் அழுவது பார்ப்பவர் எவரையும் கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் உள்ளது. குடும்பத்திற்குப் பொருளாதார ரீதியாக உதவ வெளிநாடு சென்றாலும், இக்கட்டான இத்தகைய தருணங்களில் அன்புக்குரியவர்களுடன் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அந்த இளைஞரின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
இந்தக் காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “பணம் முக்கியம்தான், ஆனால் உறவுகளின் கடைசி நிமிடங்களில் உடன் இருக்க முடியாதது ஈடு செய்ய முடியாத இழப்பு” என்றும், “ஒவ்வொரு வெளிநாட்டவரும் செலுத்தும் மறைமுக விலை இது” என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…