Categories: சினிமா

மின்னல் முரளி படத்துல என்ன Choose பண்ணதுக்கு காரணம் இதுதானாம்.. உண்மைய சொன்னா நடிகர் சோமசுந்தரம்..!!

Spread the love

பிரபல நடிகர் ஆன குரு சோமசுந்தரம் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பாண்டியநாடு, ஜிகர்தண்டா, ஜோக்கர், வஞ்சகர் உலகம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவின் ஹீத் லெட்ஜர் என குரு சுந்தரம் அழைக்கப்படுகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் சோமசுந்தரம் நடித்துள்ளார்.

மின்னல் முரளி படத்தில் குரு சோமசுந்தரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் குரு சொமசுந்தரம் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மின்னல் முரளி படத்தில் நடிக்க எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்பது பற்றி கேட்டீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த குரு சோமசுந்தரம் உங்க ஊர்ல நிறைய ஆக்டர்ஸ் இருக்காங்க.

நிறைய கேரக்டர் ஆர்டிஸ்ட் அதிகமான எண்ணிக்கையில் இருக்காங்க. இதுல என்ன எதுக்கு இந்த படத்துக்கு சூஸ் பண்ணீங்க அப்படின்னு கேட்டேன். முதலில் அவர் பதில் சொல்லவே இல்ல. ஒரு நாள் அவங்க கிட்ட எனக்கு பதில் சொல்லி தான் ஆகணும் அப்படின்னு சொன்னேன். அப்போ அவங்க சொன்னது ஒரு தமிழ் நடிகர் தான் இந்த படத்துல நடிக்கணும்னு முதல்ல யோசிச்சோம். வேற ஒரு நடிகரை யோசித்து வைத்திருந்தோம். அப்போ நீங்க நடிச்ச ஜோக்கர் வஞ்சகர் உலகம் படத்தை ஒருத்தர் போட்டு காமிச்சாரு.

எங்களுக்கு ஒரு ஆக்டர் தேவை. அவரு ரொம்ப ஃபேமஸா இருக்கக் கூடாது. ஏன்னா கதை ஓபன் ஆகும் போதே வில்லன் கிட்ட இருந்து தான் படம் ஸ்டார்ட் ஆகும். ஆடியன்ஸ் படத்தை பார்க்கும்போது தெரிஞ்ச வில்லன் நடிகரா இருந்தா ஆடியன்ஸ் மனசுல சேலஞ்ச் வந்துரும். இவர் எப்படி பண்றாருன்னு பாக்கலாம் அப்படிங்கற கண்ணோட்டம் வந்துரும். அவங்களுக்கு நான் நடிச்சா அந்த சீன் நல்லா இருக்கும் நெனச்சிருக்காங்க. அதனால என்ன Choose பண்ணி இருக்காங்க. நான் ரொம்ப லக்கி என பேசி உள்ளார்.

admin

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

4 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

5 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

6 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago