30 வருஷமாக தொடரும் வேட்டை…. கோவையில் போலீஸாரையே அதிரவைத்த கள்ளச்சாவி மன்னன்.. சிக்கியது எப்படி…?

Spread the love

கோவை குனியமுத்தூர் பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைக்காமல், கள்ளச்சாவி மூலம் திறந்து 130 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்த ஜெபா மார்டின் என்பவர் வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

புகாரின் பேரில் களமிறங்கிய காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கண்ணப்ப நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளில் 80 சவரனைப் பறிமுதல் செய்த போலீஸார், மீதமுள்ள நகைகளை மீட்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி ஒரு வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துகொண்டே, இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார். இவரிடம் ஏராளமான சாவிகள் அடங்கிய கொத்து இருப்பதாகவும், அதனைப் பயன்படுத்திப் பூட்டுகளை லாவகமாகத் திறப்பதில் இவர் கில்லாடி என்பதும் தெரியவந்தது.

கடந்த 1993 முதல் மும்பை மற்றும் கோவை எனப் பல இடங்களில் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாவியை உடைக்காமல் நூதன முறையில் கொள்ளையடித்து போலீஸாரையே குழப்பத்தில் ஆழ்த்திய குற்றவாளியை, சிசிடிவி ஆதாரங்கள் மூலம் குனியமுத்தூர் போலீஸார் பிடித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி கூடுதல் விலைக்கு மது விற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…

2 minutes ago

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை தொடரும்… தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…

3 minutes ago

விலகுகிறேன்..! “முஸ்லிம்களுக்கு அதிமுகவில் அங்கீகாரம் இல்லை” ஜவஹர் அலி அதிரடி ராஜினாமா.. அதிர்ச்சியில் எடப்பாடி..!!

"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…

5 minutes ago

சென்னையின் மெகா மாற்றம்..! 2027-ல் திறக்கப்படும் மதுரவாயல் ஈரடுக்கு பாலம்.. போக்குவரத்து நெரிசலுக்கு இனி குட்பை..! முதல்வர் உத்தரவு…!!

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம்…

16 minutes ago

“இங்கே இப்படித்தான் சிகிச்சை செய்வோம்” பெண்ணின் ஆடைகளைக் களைந்து.. மருத்துவர் செய்த அசிங்கம்… பெண் நோயாளி பகீர் வாக்குமூலம்..!!

மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…

24 minutes ago

“பணம் கொடுத்தா தான் TC” பெற்றோரிடம் லஞ்சம் கேட்டபோது… கேமராவைக் கண்டதும் நடுங்கிய பள்ளி முதல்வர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…

31 minutes ago