ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான எச்சரிக்கை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு, சில காலம் கழித்து அதனைப் புதுப்பித்தால், இடையில் உரிமம் இல்லாத அந்த நாட்களையும் சேர்த்து ‘தொடர்ச்சியாக உரிமம் வைத்திருந்ததாக’ இனி கருத முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை போன்ற அரசு வேலைகளுக்கு ‘தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் உரிமம் பெற்றிருக்க வேண்டும்’ என்ற விதி உள்ள சூழலில், ஒரு நாள் இடைவெளி விழுந்தால் கூட அந்த விண்ணப்பதாரர் தகுதியற்றவர் ஆவார்.
2019-ம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி, பழைய சட்டத்தில் இருந்த 30 நாள் சலுகை காலம் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, உரிமம் முடிந்த அன்றே அது செல்லாததாகிவிடும்; அதனைப் புதுப்பிக்கும் போது பழைய தேதியிட்டு (Back date) வழங்கினாலும், அது வேலைவாய்ப்புக்கான தகுதிக் கணக்கீட்டில் செல்லாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா அரசுப் பணி நியமனம் தொடர்பான வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் உரிமம் காலாவதியாகும் முன்பே விழிப்புடன் புதுப்பித்துக்கொள்வது அரசு வேலை கனவில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…