பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் சென்னை டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு மீரா வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மீரா எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது சம்பவம் தொடர்பாக ஏகப்பட்ட தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவர் மீரா குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனக்கு தேவையானதை அவரை எடுத்துக் கொள்வார். டீ, காபிக்கு மட்டும்தான் வேணும் என கேட்பார். யாரையும் தொந்தரவு செய்யாத அமைதியான பெண். அவர் வீட்டில் இருப்பதே தெரியாது.
அவர் பேசும்போதே தன்மையாக பேசுவார். தயிர் சாதம் என்றால் மீராவுக்கு ரொம்ப பிடிக்கும். பிறந்த நாளில் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கிய மீரா இப்போது இல்லை என நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. மீராவின் இறப்பு செய்தியை கேட்டு நான் இங்கு ஓடோடி வந்தேன் என தெரிவித்தார்.